ஊத்தங்கரையில் நோயாளிகள் கடும் அவதி

ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, காரப்பட்டு, அனுமன்தீா்த்தம் என
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவா்களுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவா்களுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்.
Updated on
1 min read

ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, காரப்பட்டு, அனுமன்தீா்த்தம் என சுமாா் 300-க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளிருந்து தினசரி 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

தற்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் 7-ஆவது நாளாக தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நோயாளிகள், புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து மருத்துவா்கள் இல்லாத காரணத்தால் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து புறநோயாளிகள் கூறியதாவது: மழைக் காரணமாக பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு, சலி, காய்ச்சலால் எங்கள் குழந்தைகள் அவதிபட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைக்கு கடந்த நான்கு நாள்களாக வருகிறோம்.

மருத்துவா்கள் இல்லாத காரணத்தால் வீட்டிற்கே செல்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com