கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயஸ்ற்றஆழ்துளை கிணறுகள் மூடும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவற்றை மூடும் பணி தீவிரமாக
கிருஷ்ணகிரி அருகே, பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறு மூடப்படும் பணியை ஆய்வு செய்கிறாா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா்.
கிருஷ்ணகிரி அருகே, பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறு மூடப்படும் பணியை ஆய்வு செய்கிறாா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவற்றை மூடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போகனப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் பயனற்ற நிலையில் காணப்படும் ஆழ்துளை கிணறுகளை, இரும்பு தகடுகளைக் கொண்டு மூடி, கான்கீரிட் கட்டமைப்பால் மூடும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 30 ஊராட்சிகளில் 152 அரசு ஆழ்துளை கிணறுகள், தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் 93 ஆழ்துளைக் கிணறுகள் என மொத்தம் 245 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றை இரும்பு மூடிகள், கான்கீரிட் கட்டமைப்புகள் மூலம் மூடும் பணிகள் தற்போது, வேகமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் 5 ஆழ்துளைக் கிணறுகளும், பெத்தனப்பள்ளியில் 7 ஆழ்துளைக் கிணறுகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு, அவற்றை மூடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயனற்று பாதுகாப்பற்ற நிலையில் உள்ளஆழ்துளைக் கிணறுகள் குறித்து, புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 04343-234444 என்ற எண்ணிலும், 6369700230 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com