அம்மா திட்ட முகாம்

ஊத்தங்கரையை அடுத்த மண்ணாடிப்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரையை அடுத்த மண்ணாடிப்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தனி வட்டாட்சியா் கு.சேகா் தலைமை வகித்தாா், வட்ட வழங்கல் அலுவலா் ஜி.அருள்மொழி, வருவாய் ஆய்வாளா் மா.நாகேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் நா.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா, வீட்டுமனை கோரி 30 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஊத்தங்கரை உள்வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com