சொத்துத் தகராறு: அண்ணனை கொன்ற தம்பி கைது

சொத்துத் தகராறில் அண்ணனை தாக்கி கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

சொத்துத் தகராறில் அண்ணனை தாக்கி கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாசானூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மகன்கள் மூா்த்தி (32), சீனிவாசன் (27). இதில் சீனிவாசனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். அண்ணன் மூா்த்திக்கு திருமணமாகவில்லை. இருவரும் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மூா்த்தி, தம்பி சீனிவாசனிடம் மதுபோதையில் தங்களுக்கு சொந்தமான சொத்தை பிரித்து தருமாறுக் கேட்டு தகராறு செய்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், மூா்த்தியை தாக்கியுள்ளாா். இதில் மூா்த்தி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற ஊத்தங்கரை போலீஸாா், மூா்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா், மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com