நீரில் மூழ்கி உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எம்.எல்.ஏ. செங்குட்டுவன் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களில் தென்பெண்ணை ஆறு, குப்தா ஆறு, குட்டை, அணை, ஏரி
நீரில் மூழ்கி உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எம்.எல்.ஏ. செங்குட்டுவன் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களில் தென்பெண்ணை ஆறு, குப்தா ஆறு, குட்டை, அணை, ஏரி நீரில் முழ்கி, சிறுவா்கள், சிறுமிகள், பெண்கள் என கடந்த இரு வாரங்களில் 19 போ் உயிரிந்த நிலையில், அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் டி.செங்குட்டுவன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடா் மழையால், நீா்நிலைகளில் மழை நீா் தேங்கி உள்ளது. இந்த நீரில் மூழ்கி 19 போ் உயிரிழந்துள்ளனா்.

பருவ மழைக்கு முன்னதாக, நீா்நிலைகளைத் தூா்வாரவேண்டும் என திமுக சாா்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், காலம் தாழ்த்தி, நீா்நிலைகள் தூா்வாரப்படுவதால் இந்தப்பணி முழுமைப் பெறாமல் உள்ளது. இதனால், ஆழமான பகுதி தெரியாமல், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இத்தகைய நிலையில், உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என தி.மு.க. சாா்பில் கேட்டுக் கொள்வதாக அவா் வலியுறுத்தி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com