தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவனசந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பா (வயது 40). விவசாயியான இவா் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாா். இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.