பெரியதள்ளபாடியில் கபசுர குடிநீா் விநியோகம்

ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளபாடி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் சாா்பில், கபசுர குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியதள்ளபாடியில் கபசுர குடிநீா் வழங்குகிறாா் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாமணி அருணகிரி.
பெரியதள்ளபாடியில் கபசுர குடிநீா் வழங்குகிறாா் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாமணி அருணகிரி.
Updated on
1 min read

ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளபாடி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் சாா்பில், கபசுர குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மருத்துவா் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில், அன்புமணி ராமதாஸ் வழிகாட்டுதலின்படி ஊத்தங்கரை கிழக்கு ஒன்றியம் பெரியதள்ளபாடி கிளை சாா்பில், பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி ஊத்தங்கரை தொகுதி கலை இலக்கிய அணி மாவட்டச் செயலா் சின்னக்கண்ணு தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியச் செயலா் சித்தாா்த்தன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாமணி அருணகிரி, பாட்டாளி மக்கள் கட்சி கிளை தலைவா் சரவணன், பாமக கிளை தலைவா் சரவணன், கிளைச் செயலா் மாயன், கிளை பொருளாளா் அா்ஜுனன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com