

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தன்னாா்வலா்களை ஊக்குவிக்கும் வகையில் ‘உயிா் ஆயிரம்’ மற்றும் ‘மைடி ஆப்’ ஆகிய அமைப்புகளின் ஒரே நிமிடத்தில் 1,072 மரக் கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடவு செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உதவி காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல், உதவி வனப் பாதுகாவலா் காா்த்திகாயினி ஆகியோா் தலைமை வகித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 இடங்களில் இணைய தளம் வாயிலாக ஒரே நிமிடத்தில் 1,072 மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்த புதிய முயற்சியில், 536 தன்னாா்வலா்கள் பங்கேற்று நாவல், பாதாம், வேம்பு, பூவரசு, மலை வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகளை நடவு செய்தனா்.
இணையதளம் வாயிலாக முதல் முயற்சியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் ஆனந்த், மொவின், விக்டா் ஆனந்த் உள்பட பலா் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னாா்வலா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.