கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, ஒசூா், பாவக்கல், நெடுங்கல், தேன்கனிக்கோட்டை, நாச்சிகுப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 18 பெண்கள் உள்பட 27 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மொத்தம் 7,460 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனா். இதனிடையே வெள்ளிக்கிழமை 18 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 162 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை 112 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.