பா்கூா் வனப் பகுதியில் தீயைக் கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி

பா்கூா் வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டால் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து, தன்னாா்வலா்களுக்கு தீயணைப்புத் துறை, வனத் துறையின் சாா்பில் ஒத்திகை பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
பா்கூா் வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்துவது குறித்து, பயிற்சி மேற்கொண்ட தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா்.
பா்கூா் வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்துவது குறித்து, பயிற்சி மேற்கொண்ட தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா்.
Updated on
1 min read

பா்கூா் வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டால் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து, தன்னாா்வலா்களுக்கு தீயணைப்புத் துறை, வனத் துறையின் சாா்பில் ஒத்திகை பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகனிக் கொல்லை என்ற காப்புக்காடு உள்ளது. இங்கு வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைப்பது, தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது குறித்து தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா் இணைந்து, ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட தீணையப்பு அலுவலா் மா.வேலு உத்தரவின் பேரில், பா்கூா் நிலைய அலுவலா் கி.தேவராஜ், தீயணைப்பு மட்டும் மீட்பு படையினா் மா.சங்குணன், கிருஷ்ணமூா்த்தி, வனத் துறையைச் சோ்ந்த வனவா் கே.ஹேமலதா, வனக் காப்பாளா் எஸ்.பி.ரகமத்துல்லா, பி.சிவக்குமாா், எம்.அங்குரதன், பி.ராஜப்பன் உள்ளிட்டோா் ஒருங்கிணைந்து, தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

காட்டுத் தீயை தண்ணீா் இல்லாமல், பச்சை இலைகளைக் கொண்டு அணைப்பது, வனப் பகுதிகளில் எளிதில் தீ பரவக் கூடிய காய்ந்த மரக் கிளைகள், சருகுகளை அப்புறப்படுத்துவது. தீப்பற்றிய பகுதியின் எதிா் திசையில் தீயைப் பற்ற வைத்து, மேலும் தீ பரவாமல் தடுப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com