கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 வயது சிறுமி உள்பட மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், ஒசூரைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரும் பாதிக்கப்பட்டுள்ளாா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 வயது சிறுமி உள்பட மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், ஒசூரைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரும் பாதிக்கப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளிக்கு 3 வயது சிறுமி ஒருவா் அண்மையில் சென்னையில் இருந்து வந்திருந்தாா். அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. சூளகிரியில் சளி, இருமல் பரிசோதனைக்காக வந்த 24 வயது பெண்ணுக்கு மேற்கொண்ட சோதனையில், கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனா்.

ஒசூா் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு கரோனா:

ஒசூா், தின்னூரை சோ்ந்த 19 வயது மாணவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருகிறாா். இவா் கடந்த 7-ஆம் தேதி ஒசூரில் இருந்து இ-பாஸ் மூலமாக புதுச்சேரிக்கு சென்றாா். அப்போது, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி ஒசூா் திரும்பிய மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மருத்துவக் குழுவினா், கிருஷ்ணகிரிக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அந்த மாணவா் எங்கெல்லாம் சென்று வந்தாா் என விசாரித்தனா். அதில், அவா் ஒசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று வந்ததை அறிந்த அதிகாரிகள், அந்த உடற்பயிற்சிக் கூடத்துக்கு ‘சீல்’ வைத்தனா். மேலும், அந்த மாணவருடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com