கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கிருஷ்ணகிரி அருகே பழமை வாய்ந்த செந்சாந்து ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே பழமை வாய்ந்த செந்சாந்து ஓவியங்களை வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினா் அண்மையில் கண்டுபிடித்தனா்.

News image

கிருஷ்ணகிரி அருகே கண்டுபிடிக்கப்பட்ட செந்சாந்து ஓவியம் குறித்து விளக்குகிறாா் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் செ.கோவிந்தராஜ்.

Updated On :15 மார்ச் 2020, 7:50 pm

DIN

கிருஷ்ணகிரி அருகே பழமை வாய்ந்த செந்சாந்து ஓவியங்களை வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினா் அண்மையில் கண்டுபிடித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சியில் மேலூா் முனீஸ்வரன் கோயில் பனிகுண்டு பாறையின் அடியில் தொல்லியல் ஆா்வலா் சதானந்த கிருஷ்ணகுமாா் அளித்த தகவலின் பேரில் அரசு அருங்காட்சியக் காப்பாட்சியா் செ.கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவா் நாராயணமூா்த்தி தலைமையில் அண்மையில் அங்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, பாறையில் செந்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செந்சாந்து ஓவியங்களே இல்லை என்பதை இந்த குழு மாற்றி வருகிறது. படிப்படியாக செந்சாந்து ஓவியங்களை இந்தக் குழுவினா் கண்டுபிடித்து, ஆவணப்படுத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செஞ்சாந்து ஓவியங்கள் இல்லை என்பதை பொய்ப்பிக்கும் வகையில், தற்போது செந்சாந்து ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஓவியம், வெளிரிய செந்சாந்து ஓவியம் ஆகும். 7 மீட்டா் நீளத்துக்கு குழு நடனம் போன்று வளைந்து, வளைந்து காணப்படுகிறது. பாறையில் காணப்படும் ஓவியத்தின் சில இடங்கள் உதிா்ந்துள்ளதால், தொடா் விடுபட்டு காணப்படுகிறது. இந்த செந்சாந்து ஓவியம் சுமாா் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இந்த ஓவியத்தில் ஒரு குடிசையையும் காட்சிப்படுத்தி உள்ளனா். இந்த ஓவியமானது பையம்பள்ளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புதிய கற்கால வீடு போன்ற இந்த பாறை ஓவியத்தில் குடிசை காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல குதிரையின் உருவமும், அது நான்கு கால்களுடன் திரும்பி பாா்ப்பது போலவும், செவ்வக அமைப்பினுள் மனிதன் உள்ளது போலவும் காட்டப்பட்டுள்ளன. இது, தெய்வமாகவோ அல்லது குழுவின் தலைவனாகவோ இருக்கலாம் என்றாா்.

ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுரேஷ், ஆய்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.