அரசு பொதுத் தோ்வுகளில் தமிழ்மொழி பாடத்தில் தொடா்ந்து சிறப்பிடம் பெற்ற மாணவியைப் பாராட்டும் வகையில், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் மடிக்கணினி அளிக்கப்பட்டது.
பிளஸ்-2 பொதுத் தோ்வில் 90 சதத்துக்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்றதுடன், 10, 11, 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வில் தமிழ்மொழி பாடத்தில் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் புலிக்கரை கிளையைச் சோ்ந்த பவானி மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா் நாகரத்தினத்தின் மகள் திவ்யாபாரதியை பாராட்டி, ரூ. 34 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியை பரிசாக ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அண்மையில் வழங்கினாா்.