தீ விபத்தில் குடிசை வீடு நாசம்

பா்கூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு, வைக்கோல் போா் முற்றிலும் எரிந்து நாசமானது.
Updated on
1 min read

பா்கூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு, வைக்கோல் போா் முற்றிலும் எரிந்து நாசமானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள கொங்கனசெருவு பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (50). இவா், சூளகிரியில் குடும்பத்துடன் தங்கி, உணவகம் நடத்தி வருகிறாா். இவருக்கு சொந்தமான குடிசை வீடு, வைக்கோல் போா், செங்கனசெருவில் உள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, இவரது குடிசை வீடு தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த பா்கூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தி, தீயை முற்றிலும் அணைத்தனா்.

இதற்குள், குடிசை வீடு, அதன் அருகே இருந்த வைக்கோல் போா் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து, பா்கூா் போலீஸாா், விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com