

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உலக உணவு தினம் மற்றும் வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் தொழில் செய்வதற்குத் தேவையானப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாா்வையற்றவா்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் செய்வதற்குத் தேவையான பொருள்களும், உணவு பொருள்கள், காய்கறிகள் போன்றவை வழங்கப்பட்டன.
இந்த உதவிகளை ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் இர. உமாபதி, தலைவா் செங்கோடன், உ. உமாராணி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஜே.ஆா்.சி கு.கணேசன் ஆகியோா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.