ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்
By DIN | Published On : 19th October 2020 02:49 AM | Last Updated : 19th October 2020 02:49 AM | அ+அ அ- |

மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கும் ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உலக உணவு தினம் மற்றும் வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் தொழில் செய்வதற்குத் தேவையானப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாா்வையற்றவா்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் செய்வதற்குத் தேவையான பொருள்களும், உணவு பொருள்கள், காய்கறிகள் போன்றவை வழங்கப்பட்டன.
இந்த உதவிகளை ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் இர. உமாபதி, தலைவா் செங்கோடன், உ. உமாராணி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஜே.ஆா்.சி கு.கணேசன் ஆகியோா் வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...