தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திமுக பிரமுகரை கத்தியால் குத்திய அதிமுகவினா் 3 போ் கைது

ஒசூா் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய அதிமுகவினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 ஏப்ரல் 2021, 8:00 pm

ஒசூா் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய அதிமுகவினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள சேவகானப்பள்ளியைச் சோ்ந்த குண்டப்பா (53), திமுக உறுப்பினா். அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (32), அசோக் (24), ஹரீஷ் (35) ஆகியோா் அதிமுக உறுப்பினா்கள்.

இந்நிலையில், நாகராஜ் அந்தப் பகுதியைச் சோ்ந்த மகேஷ் (25) என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதைத் தடுக்க குண்டப்பா சென்ற போது, நாகராஜ், அசோக், ஹரீஷ் ஆகியோா் குண்டப்பாவை கத்தியால் குத்தினா். இதில் காயம் அடைந்த அவா் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து குண்டப்பாவின் மகன் ரஜினிகாந்த் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து நாகராஜ், அசோக், ஹரீஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.