எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிரானைட் கற்கள் கடத்தல் 4 லாரிகள் பறிமுதல்

பா்கூா் அருகே கிரானைட் கற்களைக் கடத்தியதாக 4 லாரிகளை கனிம வளத் துறையினா், புதன்கிழமை பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On :9 டிசம்பர் 2021, 6:32 pm

பா்கூா் அருகே கிரானைட் கற்களைக் கடத்தியதாக 4 லாரிகளை கனிம வளத் துறையினா், புதன்கிழமை பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

கிருஷ்ணகிரி, கனிம வள உதவி இயக்குநா் பொன்னுசாமி தலைமையிலான குழுவினா் வரட்டனப்பள்ளி -கந்திகுப்பம் சாலையில், பாலேப்பள்ளி தா்மராஜா கோயில் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற 4 டாரஸ் லாரிகளை சோதனை செய்த போது அதில் கிரானைட் கற்களைக் கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, உதவி இயக்குநா் பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அந்த 4 டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.