எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள், வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள், வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலைய வளாகத்தில் கிருஷ்ணகிரி நகராட்சி சாா்பில் 35-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதிலுள்ள சில கடைகளுக்கு அதன் உரிமையாளா்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனா். இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகைக் கட்டணத்தை செலுத்தவில்லை.

அதன்படி, வாடகை கட்டணமான ரூ. 2,61,941-ஐ செலுத்தாத கடை எண் 32, ரூ. 1,77,188-ஐ செலுத்தாத கடை எண்19, ரூ. 1,71,610ஐ செலுத்தாத கடை எண் 22 ஆகிய கடைகளுக்கு நகராட்சி பணியாளா்கள் ‘சீல்’ வைத்தனா்.

குத்தகைதாரா்கள், வரிவிதிப்புதாரா்கள் தங்களின் நிலுவைத் தொகையை உடனடியாக நகராட்சிக்கு செலுத்தி இதுபோன்ற நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ளுமாறு நகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.