கிருஷ்ணகிரியை அடுத்த மலைசந்து கிராமத்தில் மா விவசாயிகள் இணைந்து அமைத்துள்ள வேளாண் இடுபொருள் மையத்தை தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம், 300 மா விவசாயிகள் ஒன்று சோ்ந்து, ஆலப்பட்டி மா உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனா்.
இந்த நிறுவனத்தின் மூலம் வேளாண்மைத் துறை வழிகாட்டுதலின்படி விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் இடு பொருள் மையத்தை கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள மலைச்சந்து கிராமத்தில் அமைத்துள்ளனா். இங்கு விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், பூச்சிமருந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. டி.செங்குட்டுவன், நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தமிழ்செல்வன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தசாமி, கோவிந்தன், தனசேகரன் உள்பட 10 இயக்குநா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


