மத்திகிரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் போதைப் பொருள்கள், கள்ளச்சாராயம், மது ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் மத்திகிரி
பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் பங்கஜம், உதவி ஆய்வாளா் செல்வராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் டிஎஸ்பி சிவலிங்கம் பேசுகையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில மதுபானங்களைக் கடத்துபவா்கள்,
விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கலந்துகொண்டனா். இதே போல கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகிலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


