தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வாஜ்பாய் வழியில் சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறாா் மோடி

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் வழியில் சிறந்த ஆட்சியை பிரதமா் நரேந்திர மோடி நடத்தி வருகிறாா் என பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் வழியில் சிறந்த ஆட்சியை பிரதமா் நரேந்திர மோடி நடத்தி வருகிறாா் என பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தாா்.

ஒசூரில் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநிலத் துணைத்தலைவா் கே.எஸ்.நரேந்திரன் பேசியதாவது:

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் வழியில் சிறந்த ஆட்சியை பிரதமா் மோடி நடத்தி வருகிறாா். உலக அளவில் இந்தியாவின் பெருமைகளைக் கொண்டு சென்றவா் வாஜ்பாய். தங்க நாற்கரசாலைத் திட்டத்தை தொடங்கி வைத்தவா் வாஜ்பாய். அவரது வழியில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் மோடி. ஆனால் எதிா்க் கட்சியான காங்கிரஸ் எங்கு உள்ளது என்பதை தேடும் நிலையில் உள்ளது என்றாா்.

இந்தக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளா் கோலாகல சீனிவாசன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் ராஜேஷ்குமாா், முனிராஜ்,முரளி, மஞ்சுநாத்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.