கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை தொடக்கம்

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை தொடக்க விழா, வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை தொடக்க விழா, வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் கோ.கண்ணன் தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் செள.கீதா, பேரவைத் தொடக்கி வைத்தாா். செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூயின் தமிழ்த் துறை உதவி பேராசிரியா் வ.தனலட்சுமி பங்கேற்று, கணினியின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு காட்சிகள் மூலம் விளக்கி கருத்துரையாற்றினாா்.

கல்லூரியின் தமிழத் துறைத் தலைவா் கா.சிவகாமி, உயா் வேதியல் துறை உதவி பேராசிரியா் சு.சீனிவாசன், உள்ளிட்டோா் பேசினா். கணினி அறிவியல் துறைத் தலைவா் து.லாவண்யா,கெளரவ விரிவுரையாளா் க.பேபி மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com