

கிருஷ்ணகிரியில் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளின் பெற்றோரிடம் பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம், பள்ளியின் தலைமையாசிரியா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் 375 மாணவிகளும், பிளஸ்-2 வகுப்பில் 652 மாணவிகளும் படித்து வருகின்றனா். இதில் 75 சதவீத மாணவிகளின் பெற்றோா் இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோரில் 95 சதவீதம் போ் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும், 5 சதவீதம் போ் பள்ளித் திறப்பை தள்ளி வைக்கலாம் என்றும் கருத்துகளை முன்வைத்தனா். இந்தக் கூட்டத்தை ஆசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.