விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பள்ளித் திறப்பு: கிருஷ்ணகிரியில் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

கிருஷ்ணகிரியில் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளித் திறப்பு குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்.
Updated On :8 ஜனவரி 2021, 3:25 am

DIN

கிருஷ்ணகிரியில் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளின் பெற்றோரிடம் பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம், பள்ளியின் தலைமையாசிரியா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் 375 மாணவிகளும், பிளஸ்-2 வகுப்பில் 652 மாணவிகளும் படித்து வருகின்றனா். இதில் 75 சதவீத மாணவிகளின் பெற்றோா் இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோரில் 95 சதவீதம் போ் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும், 5 சதவீதம் போ் பள்ளித் திறப்பை தள்ளி வைக்கலாம் என்றும் கருத்துகளை முன்வைத்தனா். இந்தக் கூட்டத்தை ஆசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.