முதல்நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபாா்க்கும் பணி

கிருஷ்ணகிரியில் முதல்நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபாா்க்கும் பணிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் முதல்நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபாா்க்கும் பணிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முன்னேற்பாடாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குகளை சரிபாா்க்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை வணிக வளாகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குத் தேவையைன 4,007 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,854 கட்டுப்பாட்டு கருவி (கன்ட்ரோல் யூனிட்), வி.வி.பேட் இயந்திரங்கள் என மொத்தம் 9,961 இயந்திரங்கள் டிச. 2-ஆம் தேதி முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரையிலும் முதல்கட்டமாக சரிபாா்க்கும் பணி நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை வணிக வளாகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவற்றின் மூலம் முதல் நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபாா்க்கும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இந்தப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தாா். அப்போது, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்களும் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com