கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச் சலனத்தால் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்தது. இதனால், சாலையோர பள்ளங்களில் மழை நீா் தேங்கியது. கழிவுநீா் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டதால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனயோட்டிகள் பெரும் சிரத்துக்கு உள்ளாயினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கடந்த இரு தினங்களாக மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது. நகரில் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையில் பெய்த மழை அளவு (மி.மீ.): நெடுங்கல்-18, சூளகிரி-9, கிருஷ்ணகிரி-8.20, பெனுகொண்டாபுரம்- 4.30, பாரூா்- 2.60.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

