இதனால் நிறைய முதலீட்டாளர்கள் தமிழகத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்கள் குறிப்பாக கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். மீண்டும் அவர்கள் எல்லாம் தமிழகத்தை தேர்வு செய்யும் அளவுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு நிச்சயம் முயற்சி செய்வோம். ஏராளமான இளைஞர்கள் பணி செய்வதற்கு தயாராக உள்ளனர். அதற்குரிய அறிவும் திறனும் அவர்களுக்கு இருக்கிறது. அதை ஊக்கப்படுத்த அதற்கு தேவையான முயற்சிகளையும் நாங்கள் செய்து வருகிறோம் என அமைச்சர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகன், எஸ்- ஏ- சத்யா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் மீரஜ்மிட்டல் ஐஏஎஸ், எல்காட் மேலான்மை இயக்குனர் அஜய்யாதவ் ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெய்சந்திரபானுரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.