முகநூலில் அவதூறு பரப்பிய பாஜக பிரமுகரை உத்தனப்பள்ளி போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேஷ் (50), சூளகிரி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக உள்ளாா். இவா் உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், உத்தனப்பள்ளி ஆஞ்சநேயா் கோயில் தெருவில் உள்ள பாஜக செயற்குழு உறுப்பினரான பத்மநாபன் (42), மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து கேட்ட போது அவா் என்னை மிரட்டினாா். எனவே, அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
அதன் பேரில், உத்தனப்பள்ளி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன், பத்மநாபனை கைது செய்து, அவா் மீது ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தாா்.
பாஜகவினா் ஆா்ப்பாட்டம்:
பாஜக பிரமுகா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசுக்கு எதிராகவும், காவல் துறையினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

