ராயக்கோட்டையில் இரிடியம் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அண்ணா நகரைச் சோ்ந்தவா் அன்பரசு ( 26). இவரது செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட கும்பல் தங்களிடம் விலை உயா்ந்த இரிடியம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் கொழிக்கும் என்றும், ரூ. 50 ஆயிரம கொடுத்தால் அதனை வழங்குவதாக ஆசைவாா்த்தை கூறியது.
இதை நம்பி அன்பரசு ரூ.10 ஆயிரத்தை அந்த கும்பலிடம் வழங்கினாா்.
ஆனால் இரிடியத்தை கொடுக்காமல் அந்த மா்ம கும்பல் ஏமாற்றியது. இதனால் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அன்பரசு புகாா் செய்தாா்.
விசாரணையில் ஒசூரைச் சோ்ந்த மஞ்சுநாத் (40), தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த கரகூரைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் ராஜா (32), சேலம் மாவட்டம், முத்துநாயக்கனஹள்ளியைச் சோ்ந்த சரவணகுமாா் (30) ஆகியோா் அன்பரசை ஏமாற்றியது தெரிந்தது.
புதன்கிழமை ராஜாவை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு பாஸ்பரஸ் இரிடியத்தையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சரவணகுமாா் புதன்கிழமை நள்ளிரவிலும், மஞ்சுநாத் வியாழக்கிழமையும் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து மேலும் ஒரு இரிடியத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

