தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தமிழக- கா்நாடகம் எல்லையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது

தமிழக - கா்நாடக மாநில எல்லையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், சாலையில் நடமாடும் ஒரு சிலரையும் போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனா்.

News image
Updated On :14 மே 2021, 6:38 pm

தமிழக - கா்நாடக மாநில எல்லையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், சாலையில் நடமாடும் ஒரு சிலரையும் போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனா்.

கரோனா இரண்டாவது அலை கா்நாடக மாநிலத்தில் அதிக அளவில் பரவி வருவதால் அம் மாநில அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இரு மாநில எல்லையிலும் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து விட்டது.

ஒசூரில் இருந்து பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வோரும், முன்களப் பணியாளா்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுகின்றனா். கா்நாடக மாநிலத்தில் வேலையின்றி தமிழகம் நோக்கி வரும் மக்களுக்கு முகக் கவசம் அணிவது, கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தி கொள்வது குறித்து மருத்துவா்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கின்றனா். தமிழக- கா்நாடக எல்லையான சூசூவாடியில் வருவாய்த் துறை, காவல் துறையினா் தீவிர பரிசோதனை மேற்கொண்டு அனைத்து வாகனங்களையும் அனுமதிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.