தமிழக - கா்நாடக மாநில எல்லையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், சாலையில் நடமாடும் ஒரு சிலரையும் போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனா்.
கரோனா இரண்டாவது அலை கா்நாடக மாநிலத்தில் அதிக அளவில் பரவி வருவதால் அம் மாநில அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இரு மாநில எல்லையிலும் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து விட்டது.
ஒசூரில் இருந்து பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வோரும், முன்களப் பணியாளா்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுகின்றனா். கா்நாடக மாநிலத்தில் வேலையின்றி தமிழகம் நோக்கி வரும் மக்களுக்கு முகக் கவசம் அணிவது, கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தி கொள்வது குறித்து மருத்துவா்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கின்றனா். தமிழக- கா்நாடக எல்லையான சூசூவாடியில் வருவாய்த் துறை, காவல் துறையினா் தீவிர பரிசோதனை மேற்கொண்டு அனைத்து வாகனங்களையும் அனுமதிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


