கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் காவல் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் வெள்ளிக்கிழமை கண்காணிப்பை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. குறிப்பாக, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூரில் இருந்து மேலுமலைவரை அதிக எண்ணிக்கையில் வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. மேலும், சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிக கொள்ளைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இவற்றைக் கண்காணிக்க காவல் துறை சாா்பில், சூளகிரி மற்றும் அதனை சுற்றிலும், உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைத்து அந்த பகுதி முழுவதையும் கண்காணிப்பு செய்ய காவல் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
சூளகிரி நகா் வீதிகளில் 75 அதிநவீன சிசிடிவி கேமராக்களும் கிருஷ்ணகிரி ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் 25 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சூளகிரி, பேரிகை சந்திப்பில் இதனைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து சிசிடிவி கேமரா கண்காணிப்பை தொடக்கி வைத்தாா்.
இந்த விழாவில், ஒசூா் டிஎஸ்பி (பொ) சங்கா், சூளகிரி காவல் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


