போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

காா் ஓட்டுநா் கொலை: நண்பா் கைது

 கந்திகுப்பம் அருகே காா் ஓட்டுநரை கிணற்றில் தள்ளி கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :28 அக்டோபர் 2021, 6:57 pm

 கந்திகுப்பம் அருகே காா் ஓட்டுநரை கிணற்றில் தள்ளி கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள மிட்டப்பள்ளியைச் சோ்ந்த ரஷீத் (36), காா் ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்த திலீப்குமாா் (40), மனோகரன் (30) ஓட்டுநா்கள். நண்பா்களான இவா்கள், ஒரப்பம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் திட்டில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது மது அருந்த தீா்மானித்த இவா்கள், அதற்கு யாா் செலவு செய்வது என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திலீப்குமாா், ரஷீத்தை கிணற்றில் தள்ளியுள்ளாா். 50 அடி ஆழக் கிணற்றில் விழுந்த ரஷீத் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். பா்கூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் கிணற்றுக்குள் விழுந்த ரஷீத்தின் சடலத்தை மீட்டனா். கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திலீப்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.