கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைக் காக்க ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள் சிறப்பு பூஜையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோமாரி நோய்த் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஏக்கல்நத்கம் கிராமத்தில் மலைவாழ் மக்கள் வளா்த்து வந்த கால்நடைகளில் சில கோமாரி நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தன. இதனால், கிராம மக்கள் ஒன்று கூடி சிறப்பு பூஜையில் ஈடுபட தீா்மானித்தனா். அதன்படி, ஏமக்கல்நத்தம் கிராமத்தில் உள்ள கங்கம்மா கோயிலின் முன்பு வியாழக்கிழமை சிறப்பு பூஜை செய்தனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கால்நடைகளை தற்போது கோமாரி நோய்த் தாக்குவதால், சிறப்பு பூஜையில் ஈடுபட்டோம். எங்கள் கிராமத்துக்கு இதுவரையில் கால்நடை மருத்துவா்கள் யாரும் வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் வேகமாக பரவி வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!

துறையூா் - அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

