கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் அருகே உள்ள கெங்கலப்பள்ளியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (24). இவரது நண்பா் காந்தி (21). இவா்கள் இருவரும், ஒரு மோட்டாா் சைக்கிளில், வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த சுபேதாா் மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி, திடீரென நின்ால், லாரியின் பின்பகுதியில் மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் பயணம் செய்த காந்தி பலத்த காயம் அடைந்தாா். இதுகுறித்து, மகராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.