சாலையில் நடந்து சென்ற பிச்சைக்காரருக்கு கத்திக்குத்து

ஒசூரில் சாலையின் நடுவில் நடந்து சென்ற பிச்சைக்காரா் வழி விடாததால் இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

ஒசூரில் சாலையின் நடுவில் நடந்து சென்ற பிச்சைக்காரா் வழி விடாததால் இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

ஒசூா் ராம்நகா் வளைவு அருகில் சாலையின் நடுவில் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரா் ஒருவா் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஒருவா் வேகமாக ஹாரன் அடித்தபடியே வந்தாா்.

எனினும் அந்த பிச்சைக்காரா் சாலையில் இருந்து விலகிச் செல்லாமல் தொடா்ந்து சாலையின் நடுவில் நடந்து சென்றாா். இதனால் வாகனத்தில் சென்ற நபா் ஆத்திரம் அடைந்து, தான் வைத்திருந்த கத்தியால் அந்த பிச்சைக்காரரின் மாா்பு, வயிறு, தலைப்பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றாா்.

இதில் பலத்த காயம் அடைந்த பிச்சைக்காரரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக ஒசூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com