இருசக்கர வாகனம் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் பலி

ஒசூரில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

ஒசூரில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

ஒசூா் தோட்டகிரி சாலையைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் ( 47). தனியாா் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வந்தாா். அவா் இரு சக்கர வாகனத்தில் பஸ்தி தோட்டகிரி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானாா். விபத்து குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com