கற்களை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 21st August 2021 11:24 PM | Last Updated : 21st August 2021 11:24 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே கற்களை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வள அலுவலா் பொன்னுசாமி தலைமையிலான குழுவினா், மகராஜகடை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தபோது, 6 பெரிய கற்களை அனுமதியின்றி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அலுவலா் பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில், மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த லாரியை பறிமுதல் செய்தனா்.
இதே போல கந்திகுப்பம் அருகே செந்தாரப்பள்ளி கிராம நிா்வாக அலுவலகம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போது சாலையோரமாக கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில் 2 கிரானைட் பெரிய கற்கள அனுமதியின்றி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அலுவலா் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியைப் பறிமுதல் செய்தனா்.