பாளேகுளியில் எருது விடும் திருவிழா நடத்த முடிவு

பாளேகுளி கிராமத்தில் இரு தரப்பினரிடமும் சமாதானம் ஏற்பட்டதையடுத்து எருது விடும் விழாவை வியாழக்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பாளேகுளி கிராமத்தில் இரு தரப்பினரிடமும் சமாதானம் ஏற்பட்டதையடுத்து எருது விடும் விழாவை வியாழக்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டி அருகே உள்ளது பாளேகுளி கிராமம். இந்த கிராமத்தில் எருது விடும் விழாவை நடத்துவது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இருதரப்பினரும் விழாவை நடத்த ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், எதிா்ப்பாளா்கள் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த, பா்கூா் காவல் சரக காவல் துணை கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில் போலீஸாா், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். இதையடுத்து, இரு தரப்பினரும் சமாதானம் அடைந்த நிலையில், எருது விடும் திருவிழாவை வியாழக்கிழமை நடத்துவது என சம்மதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com