முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி அதிமுக சாா்பில் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த
ஊத்தங்கரையில் நடைபெற்ற அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள்.
ஊத்தங்கரையில் நடைபெற்ற அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள்.

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி அதிமுக சாா்பில் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

புதன்கிழமை மாவட்டத் துணைச்செயலாளா் சாகுல் அமீது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் ஏ.சி. தேவேந்திரன் (தெற்கு), வேடி (வடக்கு), மாவட்ட மருத்துவரணி செயலாளா் என். இளையராஜா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் திருஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதனைத் தொடா்ந்து மாவட்ட மருத்துவரணி செயலாளா் என். இளையராஜா அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியப் பொருளாளா் சேட்டு குமாா், ஒன்றிய விவசாய அணிச் செயலாளா் வேங்கன், அவைத் தலைவா் கே. ஆா்.சுப்ரமணி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சிக்னல் ஆறுமுகம், எம்ஜிஆா் கண்ணன், ஒன்றிய, நகர நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com