தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அலேநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கப்பா (33), பெயிண்டா். இவரின் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் ஒருவா் திருட முயன்றாா். இதைக் கவனித்த ரங்கப்பா அந்த நபரை பிடித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பிடிபட்ட நபரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பென்னங்கூரை சோ்ந்த முருகேசன் (24) என தெரிய வந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.