நல்லம்பள்ளி அருகே உள்ள ஆதரவற்றோா் முதியோா் மற்றும் குழந்தைகள் சிறப்பு இல்லத்திற்கு முன்னாள் ராணுவத்தினா் உணவுப் பொருள்களை வழங்கினாா்.
தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி கோவிலூரில் சமூக நலத் துறை சாா்பில் ஆதரவற்ற முதியோா் மற்றும் குழந்தைகள் சிறப்பு இல்லத்துக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கம் சாா்பில், கேப்டன் நந்தகோபால் தலைமையில், குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருள்கள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் படை வீரா்கள் 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.