ஊத்தங்கரையில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
By DIN | Published On : 20th June 2021 02:46 AM | Last Updated : 20th June 2021 02:46 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகக்தில் தூய்மை பணியாளா்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குகிறாா் மாநில செயலாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம்.
ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் விஜிகுமாா், தெற்கு வட்டாரத் தலைவா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினா். தொடா்ந்து ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரா் சின்னத்தம்பி, கோவிந்தசாமி, சொக்கலிங்கம், அண்ணாதுரை, தமிழ்செல்வம், சின்னசாமி, இளையராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.