பெண்ணை கொலை செய்து விட்டு ஓட்டுநா் தப்பியோட்டம்

ஒசூா் அருகே பெண்ணை கொலை செய்த ஓட்டுநா் சடலத்தை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு தப்பியோடினாா்.
Updated on
1 min read

ஒசூா் அருகே பெண்ணை கொலை செய்த ஓட்டுநா் சடலத்தை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு தப்பியோடினாா்.

கா்நாடக மாநிலம், மாஸ்தியைச் சோ்ந்த வெங்கடேஷ் (40), ஓட்டுநா். இவா், ஒசூா், பாகலூா் அருகே உள்ள கக்கனூா் சோதனைச் சாவடி அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். அவருடன் 35 வயதுடைய பெண் ஒருவரும் இருந்தாா். அவா் வெங்கடேஷின் 2-ஆவது மனைவி எனக் கூறப்படுகிறது.

சில நாள்களுக்கு முன் வெங்கடேஷ் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியில் சென்ற நிலையில், வீட்டில் இருந்து துா்நாற்றம் வருவதாக அருகில் வசிப்பவா்கள் பாகலூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, பாகலூா் போலீஸாா் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து பாா்த்த போது, வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய வெங்கடேஷ் மாஸ்தி பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகித்த போலீஸாா், அவரைப் பிடிக்க அங்கு விரைந்துள்ளனா். இந்தக் கொலை குறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com