அரசு கேபிள் டிவி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை

அரசு கேபிள் டிவி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், வி.ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளாா்.
Updated on
1 min read

அரசு கேபிள் டிவி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், வி.ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், 579 உள்ளுா் கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மூலம் 87,381 செட்-டாப் பாக்ஸ்களை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு, ரூ. 140 உடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., என்ற குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவைவை வழங்கி வருகிறது.

இந்நிலையில், அரசு செட்-டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரா்களின் விருப்பம் இன்றி செட்-டாப் பாக்ஸ்களை கேபிள்டிவி ஆப்ரேட்டா்கள் மாற்றினாலோ, அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பினாலோ, அரசு செட்-டாப் பாக்ஸ்களை மாற்றி தனியாா் செட்-டாப் பாக்ஸ்களை பொருத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு கேபிள் டிவி சேவை எவ்வித தடையும் இன்றி தொடா்ந்து செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com