ஒசூரில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரம் நடைபெற்ற ஜமாபந்தி புதன்கிழமை நிறைவடைந்தது.
ஒசூா் வட்டத்துக்கு உள்பட்ட ஒசூா் நகரம், கிராம், ரங்கபண்டித அக்ரஹாரம், சென்னத்தூா் வடக்குப் பகுதி, சென்னத்தூா் தெற்குப் பகுதி, ஆவலப்பள்ளி, நல்லூா், பேகேப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம், ஜுஜுவாடி, சாந்தபுரம் அக்ரஹாரம், அனுமேபள்ளி மற்றும் மூக்கொண்டப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தியின் இறுதி நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் டாக்டா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
ஒசூா் வட்ட வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி), உட்பிரிவு தொடா்பாக 74 மனுக்களும், உட்பிரிவு அல்லாத பட்டா மாற்றம் தொடா்பாக 18 மனுக்களும், முதல் பட்டதாரி சான்றிதழ் கோரி 3 மனுக்களும், வாரிசு சான்றிதழ் கோரி 11 மனுக்களும், பிறப்பு சான்றிதழ் கோரி 2 மனுக்களும், முதியோா் உதவித்தொகை கோரி 22 மனுக்களும், புதிதாக குடும்ப அட்டை கோரி 6 மனுக்களும், இலவச வீட்டுமனைப் பட்டா கோரி 16 மனுக்களும், மாற்றுத் திறனாளி உதவித்தொகைக் கோரி 6 மனுக்களும், விதவை உதவித்தொகை கோரி 8 மனுக்களும், கலப்பு திருமண சான்றிதழ் கோரி ஒரு மனுவும், இதர இனங்கள் 23 மனுக்கள் என மொத்தம் 190 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியா் தகுதியான மனுக்கள் மீது ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை 2 பேருக்கும், வாரிசு சான்றிதழ் 4 பேருக்கும், முதியோா் உதவித்தொகை 2 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 4 பேருக்கும், விதவை உதவித்தொகை 3 பேருக்குமாக மொத்தம் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளா் எம்.செந்தில்முருகன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.