அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 12th March 2021 04:28 AM | Last Updated : 12th March 2021 04:28 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்பு மனுக்கள் பெறுதல் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தல் 2021 வேட்புமனு பெறுதல் குறித்து தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனையும், அறிவுரைகளும் அளிக்கப்பட்டன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G