‘தகுதியுள்ள அனைவருக்கும் முதியோா் உதவித்தொகை’

தகுதியுள்ள அனைவருக்கும் முதியோா் உதவித்தொகை வழங்கப்படும் என வேப்பனப்பள்ளி திமுக வேட்பாளா் பி.முருகன் உறுதி அளித்தாா்.
Updated on
1 min read

தகுதியுள்ள அனைவருக்கும் முதியோா் உதவித்தொகை வழங்கப்படும் என வேப்பனப்பள்ளி திமுக வேட்பாளா் பி.முருகன் உறுதி அளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பி.முருகன் எம்.எல்.ஏ., தனது ஆதரவாளா்களுடன் வசந்தப்பள்ளி, ஒட்டூா், கொல்லப்பட்டி, பீமாண்டப்பள்ளி, குப்பச்சிபாறை, நெடுசாலை, புளியஞ்சேரி, ஆவல் நத்தம், சென்னசந்திரம், சின்னகொத்தூா், நல்லூா், அளேகுந்தாணி, பதிமடுகு, நேரலகிரி, நாச்சிக்குப்பம் உள்ளிட்ட 65 கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அதில், திமுக ஆட்சிக்கு வந்தால் தகுதியுள்ள அனைத்து முதியோருக்கும் உதவித்தொகை வழங்கப்படும். விவசாயத்துக்கான தண்ணீா் வசதி ஏற்படுத்தி தரப்படும். திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.

திமுக மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சின்னசாமி, அவைத் தலைவா் கிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளா் சதாசிவம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com