வேப்பனப்பள்ளியை அடுத்துள்ள கோதண்டராம சுவாமி கோயில் தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த பூதிமுட்லு கிராமத்தில் 400 ஆண்டு பழமையான கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தேரோட்ட விழா, கொடியேற்றத்துடன் மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தையொட்டி சுவாமிக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா். இதில், வேப்பனப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். மாா்ச் 29-ஆம் தேதி, ஆஞ்சநேயா் தேரோட்டமும், 30-ஆம் தேதி பல்லக்கு உற்சவமும் நடைபெறுகின்றன.
படவிளக்கம் (28கேஜிபி6):
வேப்பனப்பள்ளியை அடுத்த கோதண்டராம சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.