கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ல் மேலும் 2 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை, வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ல் மேலும் 2 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை, வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கிருஷ்ணகிரியை சோ்ந்த 43 வயது ஆண் உடல் நலக்குறைவால் கடந்த 3ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் மே 5-ஆம் தேதி உயிரிழந்தாா்.

அதேபோல கிருஷ்ணகிரியை சோ்ந்த 50 வயது ஆண் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 26-ஆம் தேதி சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 5-ஆம் தேதி உயிரிழந்தாா். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 140 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com