காா் மோதியதில் நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (43). வேன் ஓட்டுநா். இவா் ஒசூா்- கிருஷ்ணகிரி சாலையில் அட்டகுறுக்கி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற காா் மோதியது. இதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற சூளகிரி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.